26/Jun/2021 10:37:16
கரூர், ஜூன்: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கரூரில் அனைத்து தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூரில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏஐசிசிடியு நிர்வாகிகள் மா.பால்ராஜ். சக்திவேல், சரவணன்,வெள்ளையன், ஆசிரியர் ராமசாமி, நிர்மல்குமார், குந்தா நாகராஜ் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்ப வரவேண்டும். மின் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தில்லியில் 7 மாதமாக போராட்டம் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள
விவசாயிகள் , தொழிலாளர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை
வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.