logo
பாலியல் வழக்கில் வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் வழக்கில் வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

29/Dec/2020 10:08:09

ஈரோடு. டிச: ஈரோடு மாவட்டம், பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண்  தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரபூல் மொண்டால் என்ற இளைஞரும் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் ரபூல் மொண்டால் அப்பெண்ணின் 8 வயதான குழந்தையிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக கூறி கடந்த ஆண்டு ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலயத்தில் புகார் அளித்தார். இதன்அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரபூல் மொண்டால் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி  மாலதி திங்கள்கிழமை அளித்த  தீர்ப்பில் ரபூல் மொண்டாவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டணையும் ரூ. 5 ஆயிரம்  அபராதமும்  விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார். 


Top