logo
ஆலங்குடி அருகே பேருந்து மோதி கொத்தனார் பலி.

ஆலங்குடி அருகே பேருந்து மோதி கொத்தனார் பலி.

28/Dec/2020 08:06:46

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மொபட் மீது அரசுப்பேருந்து மோதியதில் கொத்தனார் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

ஆலங்குடி அருகேயுள்ள சூரன்விடுதியைச் சேர்ந்தவர் லெட்சுமணன்(50). கொத்தனார் வேலை பார்த்து வரும் இவர், வேலை முடிந்து மொபட்டில் திங்கள்கிழமை மாலை ஊர் திரும்பியுள்ளார். சூரன்விடுதி 4 சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த அரசுப்பேருந்து மொபட் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த லெட்சுமணன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து வடகாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


Top