logo
மதுரையில் புதருக்குள் கஞ்சா  பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது

மதுரையில் புதருக்குள் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது

25/Dec/2020 12:25:44

மதுரை-டிச: மதுரையில் புதருக்குள் கஞ்சா பதுக்கி வைத்திருந்த  இளைஞரை கைது செய்து கஞ்சாவை போலீஸார் பறிமுதல் கைது செய்தனர்.

மதுரை அண்ணாநகர் உதவி ஆய்வாளர்  மணிமாறன். இவருக்கு வண்டியூர் சங்கு நகரில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார்.

அப்போது அந்த பகுதியில் புதருக்குள் கஞ்சா பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்துகொண்டிருந்த மதுரை ராஜாக்கூரைச் சேர்ந்த அருண் பாண்டி என்ற ஜெட்லி( 25) இவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார். 


 

Top