logo
மதுரையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மதுரையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

25/Dec/2020 12:02:41

 மதுரை- டிச: தானப்ப முதலி தெருவில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(42). இவர் தானப்ப முதலி தெருவில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி சோபனா கொடுத்த புகாரின் பேரில் திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Top