13/Nov/2020 12:57:28
புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் புத்தாஸ் வீரக்கலைகள் கழகம் இணைந்து நடத்திய விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு முகாம் (நவ.12) நடைபெற்றது.
தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா தலைமையில் புதுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் ரா. ராஜராஜசோழன் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட்டம், பட்டாசு, வெடிக்கும் முறைகள் குறித்த பிரச்சார கையேட்டினை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார். இதையடுத்து, பட்டாசு,மத்தாப்புகள் வெடிக்கும் முறைகள் பற்றி செய்முறை விளக்கம் அளித்தார்.
இதில், எஸ்.வி.எஸ்-ஹீரோ. மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்விஎஸ்.ஜெயக்குமார், புத்தாஸ் வீரக்கலைகள் கழக நிர்வாகி சேது.கார்த்திகேயன் தீயணைப்பு, துறை வீரர்கள் கலந்து கொண்டனர்.