logo
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பிறந்த நாள்: ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பிறந்த நாள்: ஈரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

21/Dec/2020 05:04:44

ஈரோடு, டிச: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி நிகழ்ச்சிக்கு தலைமை  வகித்து பொதுமக்களுக்கு வேட்டி ,சேலைகளை வழங்கினர். மகிளா காங்கிரஸ் தலைவி பொன்ஈஸ்வரி முன்னிலை வகித்தார். பின்னர் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.

 முன்னதாக செங்கோடம்பாளையம் அரிமா மாற்றுத்திறனாளிகள் உண்டு உறைவிடப் பள்ளியில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி  மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது.  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் கே.என்.பாட்ஷா, முகமது அர்சத், சதீஷ், கார்த்தி ,அஜித் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து,  மூன்றாம் மண்டல தலைவர் திருச்செல்வம் தலைமையில் சூரம்பட்டி அணைக்கட்டு இளைய பாரதம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா உணவு வழங்கினார்.

மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணப்பன் நெசவாளர் அணி மாவட்ட தலைவர் மாரிமுத்து, சேவாதள மாவட்ட தலைவர் ஆறுமுகம், பிரகாஷ், கருக்கு வேல், ராஜேந்திரன், லோகு, பழனிசாமி, அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை இரண்டாம் மண்டல தலைவர் விஜய் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில், மணிகண்டன் நரேஷ் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு சித்திக் திடல் பள்ளிவாசல் அருகே சிறப்பு துவா நாலாம் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர்கள் மோகன் அம்மன் மாதேஸ்வரன், பாஸ்கர் சுப்பையன் ஜல்லி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் துணை மேயர் பாபு என்கிற வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து ஆர். சி.சார்ச், அமல அன்னை ஆலயத்தில் சிறப்பு ஆராதனை நடந்தது. ஈரோடு மாணிக்கம் தியேட்டர் அருகே  45-ஆவது வார்டு தலைவர் இப்ராஹிம் தலைமையில்  வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில்,. சிராஜூதீன் ,ஜஹாங்கீர் ,ஆசிக், சாதிக், யாசிக், மோகமத் யூசுப், ஜாபர், அசோக் கலந்து கொண்டனர்.முன்னாள் தலைவர் ராஜேந்திரன் வேஷ்டி சேலை வழங்கினார். 

முத்தம் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி ஒன்றில்  மாவட்ட பொதுச் செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ் வேஷ்டி சேலை வழங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் கோதண்டபாணி,பாஸ்கர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர்கள் வின்சன்ட், சாகுல் அமீது, குமரேசன் பாலச்சந்திரன் பழனியப்பன் கலந்து கொண்டனர்.

கனி ராவுத்தர் குளம் பகுதியில் மாநகர் மாவட்ட எஸ்சி பிரிவு சின்னுசாமி தலைமையில் நடந்த நிகழ்வில், மாநகர் மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி வேஷ்டி சேலைகளை வழங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி பிரிவு துணைத் தலைவர் ராஜேந்திரன், நிர்வாகிகள் அப்புசாமி பழனிச்சாமி, பெரியசாமி ரவிச்சந்திரன், கந்தசாமி, வேலுமணி முனியம்மா,ராசம்மாள் கலந்து கொண்டனர். 

ஆர்.என் புதூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்த  வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சிக்கும்  ஒன்றாம் மண்டல தலைவர் அம்புலி தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் புனிதன், பி.ஏ கே. மோகன், நசியனூர் மூர்த்தி, மாரியப்பன், ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் துரை சாமி, நிர்வாகத் தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Top