logo
மர்ம விலங்கு  கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் :  கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பு

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் : கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பு

21/Apr/2021 05:25:40

ஈரோடு ஏப்: ஈரோடு மாவட்டம், பவானி அருகே கிராம மக்கள் வளர்த்து வரும் ஆடுகளை மர்ம விலங்கு கடித்து  சாகடிப்பதைத் தடுக்கும் வகையில் வனத்துறையினர் தானியங்கி கேமரா பொருத்தி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 


ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள ஜம்பை பேரூராட்சிக்குள்பட்ட நல்லி பாளையத்தில் கிராம மக்கள் செம்மறி ஆடுகளை அதிக அளவில் தங்களது வீடுகளில் வளர்த்து வருகின்ற னர்.இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களாக  கிராமத்து பட்டியில் வளர்த்து வரும் ஆடுக ளை இரவு நேரத்தில் புகுந்து மர்ம விலங்குகள் ஆடுகளை வேட்டையாடி வருகின்றன.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்கோரி வனத்துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் வலியுறுத்தி வந்த போதும் நடவடிக்கை எடுககாததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கிராமத்தில் புகுந்து இரவு நேரம் வேட்டையாடும் மர்மவிலங்கை கண்கா ணிக்கும் வகையில் அந்தியூர் வனத்துறையினர் தானியங்கி கண்காணிப்பு கேமராவை கிராமத்தில் இருவேறு இடங்களில் பொருத்தியுள்ளனர்.தொடர்ந்து இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் கிராம மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்..

Top