logo

ஈரோட்டில் அரசு ஊழியர் சங்க கூட்டம்

12/Dec/2020 10:06:35

ஈரோடு- டிச: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. 

கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் அன்பரசு, மாநில செயலாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஊதிய உயர்வின்போது விடுபட்ட,  21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். துறை வாரியான கோரிக்கைகளுக்கு அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். வேலை நியமன தடை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வட்ட கிளை தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Top