logo
செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றிவர்களுக்கு விருதளிப்பு

செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக சேவையாற்றிவர்களுக்கு விருதளிப்பு

05/Feb/2021 04:02:17

புதுக்கோட்டை, பிப்:புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியோர்க்கு உயிரை காத்த உத்தமர் விருது என்ற விருது வழங்கும்விழா புவனேஸ்வரி தங்கமாளிகை கூட்ட அரங்கில்   நடந்தது. 

விழாவுக்கு செஞ்சுரி லயன்ஸ் தலைவர் எஸ்  நடராஜன் தலைமை வகித்தார். லயன்ஸ் மண்டல தலைவர் எழிலரசன் வட்டார தலைவர் விஜய ரெங்கன் பட்டய தலைவர் டாக்டர் முத்துராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

லயன்ஸ் முதலாம் துணைநிலை ஆளுநர் சௌமா .ராஜரெத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதுக்கோட்டை  வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம் ,தாசில்தார் முருகப்பன், கவிஞர்  தங்கம் மூர்த்தி  மற்றும்  மருத்துவர்கள்,செவிலியர்கள் சமூகஆர்வலர்கள்,காவல்துறையினர்கள்,கல்வியாளர்கள் துப்புரவுப்பணியாளர்கள் உள்பட 210 -க்கும்  மேற்பட்டோர்க்கு  உயிரை காத்த உத்தமர் என்ற விருது வழங்கி  பொன்னாடையும் அணிவித்து கெளரவித்து வாழ்த்தினார்.


 கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியோரை .வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி,  கவிஞர்  தங்கம் மூர்த்தி மண்டல தலைவர் எழிலரசன், வட்டார தலைவர் விஜய ரெங்கன் புவனேஸ்வரி தங்கமாளிகை தலைவர் எஸ்  நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

லயன்ஸ் சங்க  தெட்சிணாமூர்த்தி, பக்தவச்சலம், நடேசன், பக்ருதீன் ரவிசந்திரன், பிரசன்னா, தேசிங்குராஜன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர் . நிகழ்ச்சியை  பொருளாளர் சேது கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார் முன்னதாக  லயன்ஸ் சங்க சாசன தலைவர் ஜெ . கண்ணன் வரவேற்றார். நிறைவாக  செஞ்சுரி லயன்ஸ் செயலாளர் ஏ . அரவிந்த்   நன்றி கூறினார் .


Top