08/Dec/2020 08:52:21
புதுக்கோட்டை: பொற்பனைக் கோட்டை அருள்மிகு பொற்பனைமுனீஸ்வரர் திருக்கோவிலில் ருத்ர ஹோமம் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டைஅருகே பொற்பனைக்கோட்டையில் அருள் பாலித்துவரும் இந்துசமய அறநிலையத்துறையைச் சேர்ந்த பொற்பனைக் கோட்டை முனீஸ்வரர் திருக்கோவிலில் ருத்ர ஹோமம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் முனீஸ்வரர் சுவாமிக்கு ருத்ர ஹோமம் மஹா பூர்ணாஹுதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து முனீஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற பூஜை பொருள்களுடன் அபிஷேகமும், கலசாபிஷேகம் நடைபெற்றது.
27 நட்சத்திரங்களுக்கான அபிஷேகம் புண்ணிய தீர்த்த அபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், புதுக்கோட்டை ,ஆலங்குடி,திருவரங்குளம் மற்றும் சுற்றுப் புறங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்வில் ஜோதிடர் செல்வராஜ், வெஸ்ட் மணி சுந்தரம்சிவனடியார் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பூசாரிகள் விழாக்குழுவினர் செய்தனர்.