07/Dec/2020 05:09:13
ஈரோடு, டிச: மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், இலவச மின்சாரம் சட்ட உரிமையை பறிக்கும் மின்சார சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் நிறுத்தம் அருகே இன்று(டிச.7) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் முன்னணி மாநகர ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாசம் தலைமை வகித்தார்.தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.