03/Dec/2020 02:11:16
ஈரோடு: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரசார பயணத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி இன்று(டிச.3) துய்யம் பூந்துறை , அரச்சலூர் , சிவகிரி , மொடக்குறிச்சி போன்ற பகுதிகளில் விவசாயிகள் , நெசவாளர்கள் மற்றும் IDPL திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் எங்கும் முறையாக நடைபெறவில்லை.ஆளும் கட்சியின் நெருக்காமனவர்களுக்கு குடிமரமத்து பணிகள் தரப்பட்டும் அந்தப் பணிகள் நடைபெறவில்லை .
மேலும் வரும் தேர்தலில் திமுக சார்பில் தேர்தலில் அதிக பெண்கள் போட்டியிடும் சூழலை மு.க.ஸ்டாலின் உருவாக்கி தருவார். பிஜேபி கட்சியின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என கொடுத்த வாக்குறுதியை பிஜேபி இன்னும் நிறைவேற்றவில்லை. 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு இருந்தும் திட்டத்தை பிஜேபி செயல்படுத்தவில்லை என்றும் கனிமொழி தெரிவித்தார்.