08/May/2021 12:15:33
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 100 பேருக்கு அரசி மற்றும் கோழி முட்டைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் அதைக்கட்டுப்படுத்த மே.10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தினருக்கு புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அரிசி மற்றும் கோழி முட்டைகளை புதுக்கோட்டை மாவட்டத்தலைவர் மற்றும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் ஜெ. பர்வேஸ் வழங்கினார்.