logo
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில்  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

11/Feb/2021 08:31:37

ஈரோடு, பிப்: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும்  ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் மூன்றாம் மண்டலம் சார்பில் ஈரோடு சூரம்பட்டி இரண்டாம் நம்பர் பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழ மை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மூன்றாம் மண்டல தலைவர் திருச்செல்வன் தலைமை  வகித்தார். சூரம்பட்டி ஆறுமுகம் பிரகாஷ் திருவெங்கடம் கற்குவேல் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈபி.ரவி  பங்கேற்று தில்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். 

 மண்டல தலைவர் ஜாபர் சாதிக், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, நெசவாளர் அணித் தலைவர் மாரிமுத்து, எஸ்சி பிரிவு தலைவர் சின்னசாமி, மலேசிய பிரிவு துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா ,பாஸ்கர் ராஜ்.

பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன் கனகராஜ் வின்சென்ட் கராத்தே யூசுப், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் மொகமத் அர்ஷத், பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி  முழக்கமிட்டனர்.

Top