29/Nov/2020 08:16:14
ஈரோடு: ஈரோடு அருகே சென்னிமலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7 -ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமாகா கட்சிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
நிகழ்வுக்கு, மாவட்ட தலைவர் வி பி சண்முகம் தலைமை வகித்தார். வட்டார தலைவர் எல்.குருநாதன்.நகர தலைவர் எம்.குமரேசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் பங்கேற்று கொடி ஏற்றி பெயர் பலகை திறந்து வைத்தார்.
இதில், நிர்வாகிகள் பி.ஐயப்பன், கே.சிஎன். நடராஜன், தங்கவேல் .சக்திவேல், முத்துகணேஷ், கதிரேஷ, ரத்தினசாமி, சோமசுந்தரம், சுரேஷ், ஈஸ்வரமூர்த்தி, எஸ்.எஸ்டி பிரிவு சாமியப்பன், ஜெயராஜ், மூர்த்தி, மணி, பட்டகாரர், நஞ்சப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.