logo
புதுக்கோட்டை அருகே சாலை விபத்து: சென்னையைச் சேர்ந்த குழந்தை உள்பட இருவர் சாவு; 6 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே சாலை விபத்து: சென்னையைச் சேர்ந்த குழந்தை உள்பட இருவர் சாவு; 6 பேர் காயம்

13/Feb/2021 12:27:31

புதுக்கோட்டை, பிப் :  சென்னையிலிருந்து காரைக்குடிக்கு சென்ற  கார் சனிக்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த  தந்தை மற்றும் அவரது 2 வயது குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ராமன் தனது உறவினர்களுடன் காரில் காரைக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

கார் சனிக்கிழமை காலை 6 மணியளவில் கார் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பொக்கன்குளம் அருகே எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலை  ஓரத்தில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராமன் (35), அவரது மகன் ரட்சன் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காரில் வந்த பாலையா (68), சிவகாமி (22), லட்சுமி (50), தர்வேஸ் (5), ஜெயந்தி (25), நந்தினி (30) ஆகியோர் காயமடைந்தனர்.கார் ஓட்டுநர் ப. சிலம்பரசன் (34) காயமின்றி உயிர்தப்பினார். காயமடைந்வர்கள்  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து கீரனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Top