16/Jun/2021 08:06:38
ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் எம் எல்ஏ திருமகன் ஈவெரா வழங்கினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஈரோடு மாவட்ட கிளை சார்பாக பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையால் வேலை இழந்த ஏழை எளிய மக்களுக்கு அரிசி
மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஈரோடு
கிழக்கு சட்டமன்ற காங்கிரஸ் எம் எல்ஏ- இ.திருமகன் ஈவெரா
வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட கல்வி அதிகாரி மாதேஷ்,மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர்
ராஜேஷ் ராஜப்பா,மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே. என். பாட்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான
ஏற்பாட்டை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்
முத்து ராமசாமி செய்திருந்தார்.