logo
திண்டல் ஜீவா நகரில் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில்  ஈடுபட்ட மக்கள்

திண்டல் ஜீவா நகரில் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

24/Nov/2020 06:07:09

ஈரோடு: ஈரோடு திண்டலில் இருந்து ரிங் ரோடு செல்லும் ஜீவா நகர் ரோடு உள்ளது.சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் இந்த ரோட்டை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த ரோடு வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக திண்டல் பகுதியிலிருந்து ரிங் ரோடுக்கும் அங்கிருந்து திண்டலுக்கும் ஏராளமான வாகனங்கள் வருகின்றன.

இரவு நேரங்களிலும் குடியிருப்பு பகுதி மக்கள் வேலைக்கு சென்று வரும் பெண்கள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்கிறார்கள். ஆனால் தற்போது இந்த பகுதியில் உள்ள ரோடு குண்டு குழியுமாக காட்சி அளித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட ரோடு  பின்னர் தார் போடாமல் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் ரோட்டில் ஆங்காங்கே நீர் தேங்கி உள்ளது. இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறிக் கீழே விழுந்த சம்பவங்களும்   நடந்து வருகிறது. எனவே இந்த ரோட்டை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குண்டும் குழியுமாக உள்ள ரோட்டில் நாற்று நடடு  கவன ஈர்ப்பு போராட்டத்தில்   ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.. 


Top