logo
2006 வன உரிமைசட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

2006 வன உரிமைசட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

23/Nov/2020 11:30:30

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பெரியார்திடலில் தமிழ்நாடுமலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் 2006 வன உரிமைசட்டத்தைஉடனடியாகஅமலாக்கவேண்டும். பழங்குடி மக்களுக்கு சாதிச்சான்றுஉடனே வழங்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திமலைவாழ் மக்கள் 300 -க்கும் மேற்பட்டவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்:  2006 வன உரிமைச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் அனைத்து பழங்குடி மக்களுக்கும் காலதாமதமில்லாமல் ஜாதிச்சான்றிதழ் வழங்கவேண்டும்.  2020 சுற்றுச்சூழல் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் அனைத்து பழங்குடிமக்களுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி கேரளாஅரசாங்கத்தைப் போல் ரூ.6 லட்சம் மதிப்புள்ளதரமான தொகுப்பு வீடுகட்டிக் கொடுத்திட வேண்டும்.  பழங்குடி மக்கள் நிலத்தை பழங்குடி அல்லாதவர்களுக்கு பத்திரபதிவுசெய்வதை தடைசெய்ய வேண்டும்.

 சத்தி, பர்கூர் மலை வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு கொள்முதலில் வெட்டுக்கூலி வண்டிவாடகை உள்ளிட்ட பிரச்சனைகளைப் பேசி தீர்வு காண முத்துரப்பு கூட்டத்தை கூட்டவேண்டும். ஈரோடு மாவட்ட மலைவாழ் மக்களுக்கு மலையாளி என சாதிச்சான்று வழங்கவேண்டும் .

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  பர்கூர், கடம்பூர், தாளவாடி உள்ளிட் டமலைப் பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் ஜெயராமனிடம் அளித்தனர். 

இப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலதுணைச் செயலாளர் சடையப்பன் தலைமை  வகித்தார். குத்தியாத்தூர் கமிட்டிஉறுப்பினர்கள் தங்கவேல், தாயலம்மாள் சடைலிங்கம், காளான், பர்கூர் மலைக்கமிட்டி உறுப்பினர்கள் தங்கராசு,பழனிச்சாமி, முருகன் சின்னச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முனுசாமி,  குத்தியாலத்தூர் மலை வட்டாரக் கமிட்டி ராஜப்பன் பர்கூர் மலை வட்டார கமிட்டி மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.சிபிஎம் சக்தி வட்டார கமிட்டி துரைசாமி, சிபிஎம் கோபி தாலுகா கமிட்டி கெம்புராஜ், சிபிஎம் அந்தியூர் தாலுகா கமிட்டி முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Top