20/Nov/2020 10:58:43
கறம்பக்குடி: கறம்பக்குடி ரோட்டரிசங்கம் சார்பாக சங்கத் தலைவர் அ.செந்தில் தலைமையில் மரக்கன்று நடும் விழா வீரடிப்பட்டி மயிலப்பசுவாமி திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கறபக்குடி ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர் வி.எம்.(எ) எஸ்.வீரப்பன் சேவைத் திட்டத்தின் கீழ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் விழாவினை துவக்கி வைத்தார். சங்கசெயலாளர் பொறியாளர் ஆர்.விஜயன் வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மேனாள் தலைவர்கள் டி.ஞானசேகரன், ஆர்.சண்முகம் வருங்கால தலைவர் சதக்கத்துல்லா, வருங்கால செயலாளர் காந்தி, பொருளாளர் எம்.சதீஷ் மேனாள் செயலாளர் ஆர்.வெள்ளைச்சாமி ,ஆர்.ரவி பாலு மூர்த்தி ,எஸ்.சிவா ஏ.தர்மலிங்கம்,விஎஸ்கே. கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பொருளாளர் ஆனந்தம் தங்கவேலு நன்றி கூறினார்.