logo
மின்சாரா வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்பக்கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மின்சாரா வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்பக்கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

19/Nov/2020 06:05:07

புதுக்கோட்டை:  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்பக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று (நவ.19) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டப் பொருளாளர் ஆர்.இளமாறன், துணைத் தலைவர் பி.அருண் நகரத் தலைவர் எஸ்.விக்கி, செயலாளர் எஸ்.பாபு, பொருளாளர் ஏ.டேவிட், மாவட்டக்குழு உறுப்பினர் என்பிஆர்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டடோர் பேசினர்.

10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மின்சார வாரியத்தில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. 


Top