logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,120 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கா  தகவல்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,120 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கா தகவல்.

19/Nov/2020 05:13:37

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் 2 நாள்கள் நடைபெறும்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவில் உள்ள  மதர்தெரசா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று(நவ.19) தொடங்கியது.

மாவட்ட ஆட்சியர்  பி.உமாமகேஸ்வரி  தலைமையில் நடைபெற்ற முகாமில் மத்திய மண்டல திருச்சி சரக காவல்துறை தலைவர்  எச்.எம்.ஜெயராம் , திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்  டாக்டர்ஆனிவிஜயா  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   இம்முகாமில் தேர்வு  பெற்ற இருபால் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வழங்கி பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறும் நோக்கில்   நடத்தப்படும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்  19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இன்று நடந்த வேலைவாய்ப்பு முகாமில் மதியம் 1 மணி வரை 4,000 நபர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பிற்கான நேர்காணல் நடந்து வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட 93 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. மேலும் இம்முகாமில் கலந்து கொண்டவர்களில் முதல் நாளான இன்று மாற்றுத் திறனாளிகள் உள்பட  1,120 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி வருவாய் கோட்ட உதவி ஆட்சியர் ஆனந்த் மோகன், மதர்தெரசா கல்விக்குழும தாளாளர் ஆர்.சி.உதயக்குமார், வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகண்டன், இராதாகிருஷ்ணன் உள்பட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 


Top