16/Nov/2020 05:22:11
ஈரோடு:பாரதிய ஜனதா கட்சியினர் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி பல்வேறு வியூகங்களை அமைத்து வருகின்றனர். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் வேல் யாத்திரையை தொடங்கியுள்ளார். மாநிலம் முழுவதும் வேல் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டு இந்த யாத்திரையை தொடங்கி உள்ளார்.
ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 20-ஆம் தேதி எல். முருகன் வருகை தர உள்ளார்.அகே நாளில் ஈரோடு சம்பத் நகரில் இருந்து வேல் யாத்திரை தொடங்க உள்ளது. இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில துணை தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்ட பொருளாளர் தீபக் ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் குணசேகரன், விவேகானந்தன், துணைத் தலைவர் சின்னதுரை.
இளைஞரணி தலைவர் கோபாலகிருஷ்ணன், மகளிர் அணி தலைவி புனிதம் அய்யப்பன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தரும்தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல். முருகனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.