07/Jun/2021 10:42:20
சென்னை, ஜூன்: கருப்புப் பூஞ்சை நோய்க்காக பயன்படும் ஆம்போடெரியின் உள்ளிட்ட அத்து உயிர் காக்கும் மருந்துகளையம் வாங்குவதற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க (7.6.2021) இன்று வரை 280.20 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே, இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை முதற்கட்டமாக வாங்குவதற்காகவும், 50 கோடி ரூபாயை வழங்கிடவும்.
இரண்டாவது கட்டமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 16 லட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு இப்பரி சோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்.டி-பி.சி ஆர் கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை வழங்கிடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து சிப்காட் நிறுவனம் மூலம். சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்ற இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டிருந்தார்.
தற்போது கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளைய வாங்குவதற்கு 25 கோடி ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.