logo
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

16/Nov/2020 05:03:06

புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில் புதுக்கோட்டையில் பெய்த கன மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று தினங்களாக சாரல் மழை பெய்து வந்தது . மேலும், அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இதனால் தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் அமைக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளின் கடைகள் பெரும் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில் நேற்று முழுவதுமாக மழை பெய்யவில்லை. இந்நிலையில், இன்று (16.11.2020) காலை முதல் புதுக்கோட்டை, ஆலங்குடி, கரம்பக்குடி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வந்தது.புதுக்கோட்டையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு குறைவதுடன் விவசாய பயிர்களுக்கு ஏற்ற மழையாக உள்ளதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Top