logo
பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு

பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு

25/May/2021 07:58:29

சென்னை, மே: பாலியல் புகாருக்கு ஆளாகி கைது செய்யப்பட்ட சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர். ஆர். ஜி. ஆனந்த்  வெளியிட்ட  தகவல்சென்னை பத்மாசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் வந்திருக்கும் நிலையில் யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளும்.மேலும் பெருத்தோற்று காலத்தில் ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வரும் நேரத்தில் இந்த மாதிரி நடக்கும் நிகழ்வுகள் பெரும் வேதனை அளிக்கிறது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்..

Top