logo

ஈரோட்டில் ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி முகாம் நிறைவு

12/Nov/2020 10:25:02

ஈரோடு: ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், கற்போம் எழுதுவோம் இயக்கம் மற்றும் பள்ளி சாரா கல்வி வயது வந்தோர் இயக்கம் சார்பில் ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் துவங்கியது.

 இந்த பயிற்சியில் 15 ஆசிரியர்கள், 30 ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சி 12.11.2020 -இல் நிறைவடைந்தது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் ஒன்றியத்தில் ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு எழுத்தறிவித்தல் தொடர்பான பயிற்சியை அளிப்பர். பாட்டு, செயல்வழியாக கற்றல், கற்பித்தல் குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர். 

இதுகுறித்து கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அனிதா கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் படிக்காதவர்கள் 13ஆயிரத்து 778 பேர் என கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதற்கட்டமாக எழுத, படிக்க வைப்பதற்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்களுக்கு எழுத்தறிவிப்பது தொடர்பாக மாவட்ட அளவில் ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது என்றார். 


Top