logo
தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்துகளை  முழுமையாக வழங்கக்கோரி இந்திய கம்யூ.ஆர்ப்பாட்டம்

தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்துகளை முழுமையாக வழங்கக்கோரி இந்திய கம்யூ.ஆர்ப்பாட்டம்

08/Jun/2021 12:55:47

ஈரோடு. ஜூன்: மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெருந்துறை ஜீவா இல்லம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு  கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கே.ஆர்.தங்கவேல் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்டுள்ள தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்துகள் அளவு குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் (எச்எல்எப்) பயோடெக் ஒருங்கி ணைந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தையும், அது தொடர்பான சொத்துக்களையும் தமிழக அரசிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பு இழப்பீட்டு தொகை உட்பட தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி பாக்கி முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து ரூ.50 மற்றும் ரூ.40 -க்கு பெட்ரோல், டீசல் விற்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Top