10/Nov/2020 07:37:54
புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறைவாசிகளுக்கு சீருடைகள் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி சிறைவளாகத்தில் (10.11.2020) நடைபெற்றது.
நிகழ்வுக்கு,தலைவர் எஸ். நடராஜன் தலைமை வகித்தார். டாக்டர் முத்துராஜா முன்னிலை வகித்தார் மாவட்ட சிறைத்துறை மற்றும் பார்ஸ்டல் பள்ளி கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி வரவேற்றார். திருச்சி சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஆர்.கனகராஜ் கலந்துகொண்டு 17 சிறைவாசிகளுக்கு சீருடைகள், இனிப்புகள் வழங்கி பேசுகையில், புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சமூக சேவைகளை பாராட்டியதுடன் பெட்ரோல்பங்கில் பணியாற்றும் சிறைவாசிகளுக்கு அறிவுறைகள் கூறியும் தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், சிறைத் துறை சிறைஅலுவலர் செல்வதுரை,விஜகுமார், புகழரசி,ராஜேஷ்கண்ணா,செஞ்சுரி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கண்ணன், தெட்சிணாமூர்த்தி, பொருளாளர் சேது கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர் செயலாளர் ஏ.அரவிந்த் நன்றி கூறினார்.