logo

தெலங்கானாவில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 2,500டன் புழுங்கல் அரிசி

10/Nov/2020 12:39:10

ஈரோடு:தெலங்கானா மாநிலத்தில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் 2,500 டன் புழுங்கல் அரிசி வந்தது.

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக தெலங்கானா மாநிலம் செரளபள்ளியில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 2,500 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. 

இந்த அரிசி மூட்டைகள் தெலங்கானாவில் இருந்து 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் ஷெட்டுக்கு வந்தடைந்தது. இந்த அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, ஈரோடு மூலப்பாளையம், பவானி ரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Top