22/Mar/2021 10:34:28
புதுக்கோட்டை, மார்ச்: தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை செல்போனில் சி-விஜில் செயலி மூலம் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் 26.02.2021 பிற்பகல் முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக தனிநபரோ அல்லது அரசியல் கட்சி பிரமுகர்களோ செயல்பட்டால், பொதுமக்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்கள் புகார் ளை சி-விஜில் என்ற செல்போன் செயலி வாயிலாக தெரிவிக்கலாம்.
மேற்காணும் சி-விஜில் செயலியில் பொதுமக்கள் தங்கள் புகார்ளை புகைப்படம் வாயிலாக, ஆடியோ வாயிலாக மற்றும் வீடியோ வாயிலாகவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு சி-விஜில் செயலியில் தெரிவிக்கலாம்.