logo

தனியார் இணையதள பைபர் கேபிள் பதிக்கும் போது நேரிட்ட விபத்தில் இளைஞர் காயம்-3 வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

08/Nov/2020 06:03:44

ஈரோடு மாநகரப் பகுதிகளின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனத்தின் அதிவேக இணையதள வசதி கொண்ட இணைப்புக்களை வீடுதோறும் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகளுக்கு இணைப்புகள் வழங்குவதற்காக பைபர் குழாய்கள் பதிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு சஞ்சய் நகர் பகுதியில் தனியார் நிறுவனத்தின் பைபர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றிருந்த போது பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த மோகன் எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

திடீரென மின்சாரம் தாக்கியதில் அப்பகுதி மின்சார இணைப்புகளிலும் பிரச்னை ஏற்பட்டு அப்பகுதியிலுள்ள 3-க்கும் மேற்பட்ட வீடுகளிலுள்ள குளிர்சாதன இயந்திரம், பிரிட்ஜ், மின்விசிறி, சோலார் பேனல், மடிகணினி இணைப்புகள் உள்ளிட்ட மின்சாரத்தில் இயங்கும் வீட்டு உபயோகப்பொருட்கள் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.

 இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற் கட்ட, விசாரணையில் அதிவேக இணையதள வசதி இணைப்பு ஒயருடன், மின்சார இணைப்புக்கான ஒயரும் மாட்டிக் கொண்டதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக  கண்டறியப்பட்டுள்ளது. 


Top