18/Mar/2021 10:58:20
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேமுதிக கூட்டணி சார்பில் போட்டியிடும தேமுதிக வேட்பாளர் சுப்பிரமணி தனது வேட்பு மனுவை வியாழக்கிழமை புதுக்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் டெய்சி குமாரிடம் தாக்கல் செய்தார்.
முன்னதாக அவர் தேமுதிக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக தேர்தல் நடத்தும் அலுவலகம் வரை வந்தார்.வேட்புமனு தாக்கல் செய்தபிறகு பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் கடை ஊழியர்களிடம் தேமுதிக வேட்பாளர் சுப்பிரமணியம் வாக்கு சேகரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிகழ்ச்சியில் தேமுதிக தேசிய மட்ட குழு உறுப்பினர் ஜாகீ,ர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் வீரமணி, ஒன்றிய செயலாளர்கள் கார்த்திகேயன் முருகேசன், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக தேர்தல் பொறுப்பாளர் கே.ஆர்.ஞானம், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், அருள் இருதயராஜ், நகர செயலாளர் சிங்கமுத்து மற்றும் கூட்டணி கட்சிகளான எஸ்டிபிஐ, ஏ எம் எம் ஆகிய கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்