logo
ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  பெரியாரிய உணர்வாளர்கள் கைது

ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கைது

08/Nov/2020 12:55:08

ஈரோடு: ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் 7.11.2020 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமை வகித்தார்.. திராவிட கழக அமைப்பு செயலாளர் சண்முகம், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வொ. பொன்னையன், திராவிட விடுதலை இயக்க ரத்தினசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

இதில், தமிழ்நாடு தினம் கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன் உள்ளிட்ட 21 பேரை கைது செய்ததை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் முழக்கங்களை  எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர். இருப்பினும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரியாரிய உணர்வாளர்களை கைது செய்து, விடுவித்தனர். 


Top