03/Nov/2020 07:05:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (3.11.2020) காலையில் நடைபெற்ற நிகழ்வில் கொரோனா தொற்று காலத்தில் மாணவர்கள் சத்தான உணவை உட்கொள்ள வசதியாக உலர் உணவுப் பொருட்களை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தி வழங்கினார். இதில், வாலாஜாபாத் வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.