logo
ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி சிறுவன் சாவு.

ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி சிறுவன் சாவு.

30/Apr/2020 09:06:00

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

ஆலங்குடி அருகேயுள்ள சேவுகன்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் சுந்தரேசன் (13). அப்பகுதியில், வியாழக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.அப்போது,சிறுவன்  சாப்பிட்டு விட்டு கை கழுவ வீட்டுக்கு வெளியே சென்றுள்ளார். அப்போது, சுந்தரேசனை மின்னல் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த சிறுவனை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு சுந்தரேசன் உயிரிழந்தார்.

இதுகுறித்து செம்பட்டி விடுதி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Top