02/Nov/2020 10:28:49
ஈரோடு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் - 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தலைமையேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக 1-11-2020-அன்று சிறப்புரையாற்றினார்.
ஈரோடுதான் எல்லாவற்றுக்கும் தொடக்கம்; ஆரம்பம். தந்தை பெரியார் அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை; திராவிட இயக்கம் இல்லை. பேரறிஞர் அண்ணா அவர்களை உருவாக்கியவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியார் இல்லாவிட்டால் பேரறிஞர் அண்ணா இல்லை. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அண்ணா இல்லாவிட்டால் கலைஞர் இல்லை. கலைஞர் அவர்கள் இல்லாவிட்டால் இந்த இயக்கம் இல்லை; நாம் இல்லை.
இன்னும்
சொல்லப்போனால், நான் திறந்து வைத்த முதல்
கலைஞர் சிலை,
ஈரோட்டில் திறக்கப்பட்டதுதான்.இத்தகைய பெருமை
வாய்ந்த மண்ணில்
இருந்து தமிழகம்
மீட்போம் என்ற
மாபெரும் பரப்புரையைத்
தொடங்குவதில் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி
அடைகிறேன்.
2018-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம்
நாள் ஈரோட்டில்
மண்டல மாநாடு
நடந்தது.
நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் முதுமையின்
காரணமாக கோபாலபுரத்தில்
ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களால் ஈரோடு
மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை. அந்த
மாநாட்டில் நான் பேசும் போது ஐம்பெரும்
முழக்கங்களை அறிவித்தேன்.
1971 திருச்சி மாநாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்ததைப் போல 2018 ஆம் ஆண்டு ஈரோடு மாநாட்டில் நான் அறிவித்தேன்.கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம். தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம். அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம். மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம். வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம். என்பவைதான் அந்த ஐம்பெரும் முழக்கங்கள்.
நான் சொல்ல அனைவரும்
அதனைச் சேர்ந்து
முழங்கினீர்கள். அந்த மாநாட்டில் நான் பேசும்
போது இன்னொன்றையும்
சொன்னேன்.மீண்டும்
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி
உருவாகி இருக்கிறது
என்ற அந்தப்
பெருமையை பரிசை
தலைவர் கலைஞரிடத்தில்
நான் ஒப்படைக்க
வேண்டும் என்று
நான் சூளுரை
மேற்கொண்டேன். ஆனால் காலம் நம்மிடம் இருந்து
அவரைப் பிரித்துவிட்டது.
ஆனாலும் கடமையை
மறப்பவர்கள் அல்ல கலைஞரின் பிள்ளைகள் என்பதை
நிரூபிப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
ஒரு
புதிய இளைஞர்,
எத்தகைய உற்சாகத்துடனும்
ஆர்வத்துடனும் கழகப்பணி ஆற்றுவாரோ அத்தகைய உற்சாகத்துடனும்
ஆர்வத்துடனும் கழகப் பணியாற்றி வருபவர் நம்முடைய
முத்துசாமி.அவரது செயல்பாடுகள் அனைவருக்கும் உற்சாகத்தையும்
ஊட்டுபவை. எனவே,
ஈரோடு முத்துசாமி,
கழகத்தின் சொத்தாக
இந்த வட்டாரத்தில்
இருக்கிறார்.
அதேபோல்
வடக்கு மாவட்டக்
கழகச் செயலாளரான
நமது நல்லசிவம் தனது பெயரைப் போலவே
நன்றாக, சிறப்பாகச்
செயல்பட்டு வருகிறார். நமது தலைமைக் கழகத்தில்
உள்ள ஐந்து
துணைப் பொதுச்
செயலாளர்களில் இரண்டு பேர் இந்த ஈரோடு
மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் அரவணைப்பும் வழிகாட்டுதலும்
ஈரோடு மாவட்டத்திற்கு
வலிமை தரக்கூடியதாக
அமைந்திருக்கிறது.
இன்று,
ஈரோடு வடக்கு
மாவட்டத்தில் 205 இடங்களிலும், தெற்கு மாவட்டத்தில் 140 இடங்களிலும் காணொலிக் காட்சி வாயிலாக
இந்த மாபெரும்
பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. ஏறத்தாழ 60 ஆயிரம்
பேர் இதனைக்
கண்டு வருகிறார்கள்.
கலைஞர் செய்திகள்
நேரலையிலும் இலட்சக்கணக்கானோர் பார்த்து
வருகிறார்கள். சமூக வலதளங்கள் மூலமாகவும் இலட்சக்கணக்கானோர்
பார்த்து வருகிறார்கள்.
தொழில்நுட்ப வசதியின் மூலமாக நாம் எழுப்பி
வரும் மக்கள்
அலை இது.
இதற்குக் காரணமான
முத்துசாமி, நல்லசிவம் ஆகிய இருவருக்கும் எனது
பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. என்ற
கட்சிக்குத் தலைவரும் இல்லை, பொதுச்செயலாளரும் இல்லை. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்று பன்னீர்செல்வமும்
பழனிசாமியும் ஆளுக்கு ஒரு நேம் போர்டு
தயாரித்துக் கொண்டு அதன் கீழே உட்கார்ந்து
கொண்டு இருக்கிறார்கள்.கட்சியும் எல்லா
விஷயத்திலும் இரண்டாக இருக்கிறது. எப்போது இரண்டாக
உடைந்து விழுமோ
என்ற நிலைமையில்
ஒரு கண்ணாடித்துண்டு
ஒட்டிக் கொண்டு
இருப்பதைப் போல அ.தி.மு.க. என்ற
கட்சியும் - அவர்களால் ஆளப்படும் அரசும் இருக்கிறது.
அவர்களுக்கு கட்சி நடத்தவும் தெரியாது. ஆட்சி
நடத்தவும் தெரியாது.
ஏனென்றால்
இருவரும் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தப் பதவிக்கு
வந்தவர்கள் அல்ல. ஒருவர் ஜெயலலிதாவின் காலில்
விழுந்து பதவிக்கு
வந்தார். இன்னொருவர்
சசிகலா காலில்
ஊர்ந்து போய்
பதவிக்கு வந்தார்.
உழைக்காமல் நடித்து பதவிக்கு வந்த அவர்கள்
இப்போதும் முதலமைச்சர்,
துணை முதலமைச்சர்
என்ற வேஷங்களில்
நடித்துக் கொண்டு
இருக்கிறார்கள்.
2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.
ஜெயலலிதாவும், பன்னீர்செல்வமும் பழனிசாமியும்
இந்த நாட்டை
பத்தாண்டு காலம்
ஆண்டுள்ளார்கள். முடிந்தவரை தங்கள் பங்குக்கு தமிழ்நாட்டை
அதல பாதாளத்துக்குப்
கொண்டு போய்விட்டார்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி நான்கு ஆண்டுகள்
தண்டனை பெற்றார்
அம்மையார் ஜெயலலிதா.
சிறைக்குச் சென்றார். ஜாமீனில் வெளியில் வந்த
பிறகு அவர்
ஆக்டிவ் ஆக
ஆட்சி செய்யவில்லை.
இறுதியில்
உடல்நலமில்லாமல் ஆனார். எப்போது எப்படி எந்தத்
தேதியில் இறந்தார்
என்பது இதுவரை
மர்மமாக இருக்கிறது. அதற்குப்
பிறகு அ.தி.மு.க.வில் நடந்த அதிகாரப்போட்டிகள்
அனைத்தும் உங்களுக்குத்
தெரியும். ஆனால்
அது ஆட்சியை
பாதித்தது. முதலமைச்சர் நாற்காலியை தக்க வைப்பதற்காக
பழனிசாமியும் - முதலமைச்சர் நாற்காலியை பிடிப்பதற்காக பன்னீர்செல்வமும்
தினந்தோறும் நடத்திய நாடகங்களைத்தான் நான்கு ஆண்டு
காலம் பார்த்தோம்.
இதைத் தாண்டி
ஒன்றே ஒன்று
நடந்தது அதுதான்
கொள்ளை. கொள்ளையடிப்பது
ஒன்றே இந்த
ஆட்சியின் கொள்கை.
அதனால்தான் தமிழகம் எல்லா விதத்திலும் பின்
நோக்கிப் போய்விட்டது.
ஒரே
ஒரு ஆள்
கூட கொரோனாவால்
பாதிக்கப்பட அம்மாவின் அரசு விடாது என்று
சட்டமன்றத்தில் சொன்னார் பழனிசாமி. ஆனால் கொரோனாவால்
பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 11
ஆயிரத்தைத் தாண்டி விட்டது. இதற்கு பழனிசாமியின்
பதில் என்ன?
இதுவரை 7 லட்சம்
பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பழனிசாமியின்
பதில் என்ன?
இத்தகைய பழனிசாமியைத்தான்
மோடி பாராட்டுகிறார்.
அவர் ஏன்
பாராட்டுகிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உலகத்தில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 90 லட்சம் பேர் என்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் 80 லட்சம் பேர். அமெரிக்காவில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 2 இலட்சத்து 32 ஆயிரம் பேர் என்றால் இந்தியாவில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரம் பேர். இத்தகைய பிரதமர் எடப்பாடியை பாராட்டாமல் வேறு என்ன செய்வார்?
மத்தியிலும்
மாநிலத்திலும் ஆளும் இரண்டு அரசுகளும் மக்கள்
விரோத, மக்களுக்குச்
சம்பந்தமில்லாத அரசுகளாக இருக்கின்றன என்பதற்கு உதாரணமாக
இவர்கள் ஆட்சி
செய்த மொத்த
ஆண்டுகளையும் சொல்ல வேண்டியது இல்லை.
அண்மை காலமாக இவர்களது செயல்பாடுகளால் மக்கள் அடைந்த பாதிப்புகளே போதும்; இவர்களுக்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எல்லா விதங்களிலும் மிகமிக மோசமான அரசு தான் இந்த எடப்பாடி பழனிசாமியின் அரசு.
தூத்துக்குடியில் அமைதியான வழியில் ஊர்வலம் சென்று கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி 13 பேரைச் சுட்டுக் கொன்ற அரசு இந்த அரசு. தனது திறமையின்மையால் 7 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவும், 11 ஆயிரம் பேர் மரணத்துக்கும் காரணமானது இந்த அரசு.
நீலகிரி
மலைச்சரிவாக இருந்தாலும், கஜா புயலாக இருந்தாலும்
சென்னை மழை
வெள்ளமாக இருந்தாலும்
எந்த இயற்கைப்
பேரிடரிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ,
பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையோ முறையாக
எடுக்காத அரசு
இந்த அரசு.
சாத்தான்குளத்தில் தந்தையும் மகனுமான
ஜெயராஜ், பென்னிக்ஸ்
என்ற இரண்டு
வர்த்தகர்களை அடித்தே கொன்ற அரசு இந்த
அரசு.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை அச்சுறுத்தி
பாலியல் படங்கள்
எடுத்த கும்பலை
வெட்கமில்லாமல் காப்பாற்றத் துடித்த ஆட்சி இந்த
ஆட்சி.
சென்னையில் அ.தி.மு.க.வினர் வைத்த பேனரால் விபத்துக்குள்ளாகி இறந்த சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான அரசு இந்த அரசு. கோவையில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்து அனுராதா என்ற பெண் காலை இழக்கக் காரணமான அரசு இந்த அரசு. தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன்
எடுக்கும் பிரச்சினை,
தேனியில் நியூட்ரினோ,
சேலம் எட்டு
வழிச்சாலைக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்படுவது, மணல்
கொள்ளை, கூவம்
நதியைச் சுத்தப்படுத்தாமல்
திட்டத்தைக் கைவிட்டது. உயர்மின் கோபுரங்களால் வரும்
பாதிப்பு என்று
சொல்லிக் கொண்டே
போகலாம். எந்த
பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு
காணாத அரசு
இந்த அரசு.
முதலாவது
உலக முதலீட்டாளர்
மாநாடு நடத்தி
2 இலட்சம் கோடி
முதலீட்டை ஈர்த்ததாகப்
பொய் சொன்ன
அரசு இந்த
அரசு. இரண்டாவது
உலக முதலீட்டாளர்
மாநாடு நடத்தி
3 லட்சம் கோடி
முதலீட்டை ஈர்த்ததாகவும்
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை
வாய்ப்பை உருவாக்கிக்
கொடுத்ததாகவும் பொய் சொல்லி வரும் அரசு
இந்த அரசு.
விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,
தொழிலாளர்கள், பாட்டாளிகள், சிறுகுறு தொழில் செய்வோர்,
பெருந்தொழில் நிறுவனங்கள் என எந்தத் தரப்பும்
இந்த ஆட்சியில்
நிம்மதியாக இல்லை. அனைவர் நிம்மதியையும் கெடுத்த
அரசு இந்த
அரசு.
மக்கள் நலத்திட்டம் எதையும்
கொண்டு வந்து
அறிமுகப்படுத்தவில்லை. எந்தத் திட்டங்களில்
பணம் கொள்ளையடிக்க
முடியுமோ அதை
மட்டும் கொண்டு
வந்து கொள்ளையடிக்கிறது
இந்த அரசு.
கமிஷன், கரெப்ஷன்,
கலெக்ஷன் மட்டுமே
நோக்கமாகக் கொண்டது இந்த அரசு.இப்படி
இந்த அ.தி.மு.க. அரசு
ஏன் நீடிக்கக்
கூடாது என்பதற்கு
என்னால் பெரிய
பட்டியல் போட
முடியும். ஆனால்
இந்த ஆட்சி
ஏன் தொடர
வேண்டும் என்பதற்கு
அவர்களால் நியாயமான,
உண்மையான ஒரு
காரணம் சொல்ல
முடியுமா.
போலியான
பொய்யான புள்ளிவிவரங்களைக்
கொடுத்து விருதுகள்
வாங்கிவிட்டதாக வெட்கமில்லாமல் முதலமைச்சர்
சொல்லிக் கொள்கிறார்.
ஆனால் உண்மையில்
இந்த தமிழ்நாடு
அதல பாதாளத்தில்
கிடக்கிறது என்பது தான் உண்மை.
பால் ஹாரிஸ் ஃபெலோ விருதை முதல்வர் பெற்றதாக சமீபத்தில் பெரிய அளவில் செய்தி பரப்பப்பட்டது. 2006-ஆம் ஆண்டு வரை 10 லட்சம் பேர் இந்த விருதை வாங்கி இருக்கிறார்கள் என்றும் 75 ஆயிரத்து 410 ரூபாய் கொடுத்தால் யாருக்கும் இந்த விருதை கொடுப்பார்கள் என்றும் தகவல் வந்தது. இதுதான் எடப்பாடி வாங்கிய விருது.ஆனால் உன்மையான சில கருத்துக்கணிப்புகள் குறித்து இந்த அரசாங்கம் வெளியில் சொல்வது இல்லை.
சி-வோட்டர் என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. கொரோனா காலத்தில் அதிகம் கவனம் ஈர்த்த முதலமைச்சர் பட்டியலில் கடைசி ஐந்து பேரில் ஒருவராக மிக மோசமான இடம் பிடித்தார் எடப்பாடி பழனிசாமி. இதுதான் உண்மையான நிலைமை. இதைப் பார்த்து இந்தியாவே தமிழகத்தைப் பார்த்துச் சிரிக்காதா, இதற்காகத்தான் தமிழகத்தை மீட்டாக வேண்டும் என்கிறோம்.
மாநில
தொழில் சீர்திருத்த
செயல் திட்டம்
- 2020 அடிப்படையில் எளிதாக தொழில்
நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப்
பட்டியலை மத்திய
அரசு சில
வாரங்களுக்கு முன்னால் வெளியிட்டுள்ளது. இதில் பதினான்காவது
இடத்தில் இருக்கிறது
எடப்பாடி பழனிசாமியின்
ஆட்சி.
அந்தப்
பட்டியல்: ஆந்திரப்
பிரதேசம், உத்தரப்பிரதேசம், தெலங்கானா,
மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்,
. இமாசலப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்காளம், குஜராத், உத்தரகாண்ட், டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடுஎன்று
பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப்
பட்டியலை வெளியிட்டது
மத்திய அரசுதான்.
முதலமைச்சர்
நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும்.
முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்றால்,
பெரிய நிறுவனங்கள்
தொழில் தொடங்க
வரமாட்டார்கள். தமிழ்நாட்டில் அதுதான் நடந்து கொண்டு
இருக்கிறது. இதற்காகத்தான் தமிழகத்தை மீட்டாக வேண்டும்
என்கிறோம், எல்லோரும் அந்தப் பணியில் ஈடுபட
போகிறோம்.
தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பறித்துவிட்டது. அதனைத் தட்டிக் கேட்காமல் மாநில அரசு மவுனம் காக்கிறது.ஒரு காலத்தில் தமிழகம் என்றால் மத்திய அரசும், டெல்லியும் பயப்படும். ஆனால் எடப்பாடி அரசு, இன்றைய தினம் டெல்லியைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறது.
இந்தி மொழித் திணிப்பா, எவ்வளவு
வேண்டுமானாலும் திணித்துக் கொள். சமஸ்கிருத மேலாதிக்கமா,
எனக்கு அதைப்
பற்றிக் கவலை
இல்லை.வேளாண்மைச்
சட்டமா, நிறைவேற்றிக்
கொள்.ஜி.எஸ்.டி.
உரிமையா, மத்திய
அரசே வைத்துக்
கொள்.புதிய
கல்விக் கொள்கையா,
கொண்டு வா.
சுற்றுச்சூழல்
சட்டங்களா நிறைவேற்றிக்
கொள். என்று
எல்லா மோசடிகளுக்கும்
தமிழ்நாட்டைத் திறந்து விட்டு விட்டது எடப்பாடி
அரசு.அரசமைப்புச்
சட்டம் வழங்கியுள்ள
மாநில உரிமைகளை
மத்திய பா.ஜ.க. அரசு பறிக்கிறது
என்றால், அதை
வலியப்போய் தூக்கித் தருகிற அரசாக எடப்பாடி
அரசு இருக்கிறது.ஜி.எஸ்.டி. வரி
வசூலில் தமிழகத்துக்கு
வர வேண்டிய
நிலுவைத் தொகையை
துணிச்சலாகக் கேட்கும் தைரியம் கூட எடப்பாடி
அரசுக்கு இல்லை.
தெலங்கானா
முதலமைச்சர், எங்களுக்குப் போதிய நிதி உதவி
செய்யுங்கள்; இல்லையேல் எங்களுக்குத் தனியே நிதி
உருவாக்கும் வாய்ப்பை, அதிகாரத்தையாவது அளியுங்கள்’ என்று
கேட்டுள்ளார். இப்படி எடப்பாடி பழனிசாமியால் கேட்க
முடியுமா. புதுவை
மாநில ஆட்சிக்கு
அங்கிருக்கும் ஆளுநர் கிரண்பேடி கொடுக்கும் குடைச்சல்களை
நேருக்கு நேராக
எதிர்த்து நிற்கிறார்
முதல்வர் நாராயணசாமி.
பழனிசாமியால் இது முடியுமா.
இலவச மின்சாரத்தையே பறிக்கும் நோக்கத்தோடு புதிய மின்சார திருத்தச் சட்ட மசோதா வந்ததே, பழனிசாமி எதிர்த்தாரா.காவிரி நதிநீர் ஆணையத்தினை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆளுகையின்கீழ் கொண்டு போய்விட்டது மத்திய அரசு. இனி காவிரி நதிநீர் ஆணையத்தின் மூலம் எந்தப் பயனும் இல்லை.
இதனை எதிர்த்தாரா
முதலமைச்சர்.விவசாயிகளின் ஒரே கோரிக்கை, தங்களது
விளைச்சலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும்
என்பதுதான். அதற்குக் கூட உத்தரவாதம் தராத
மூன்று சட்டங்களை
எல்லாருக்கும் முந்திப் போய் ஆதரித்தார் பழனிசாமி.
அப்படியானால் அவரது உண்மையான நோக்கம் என்ன.
மக்கள்
எப்படிப் போனால்
எனக்கென்ன, எனக்கு ஆட்சி நிலைத்தால் போதும்,
கொள்ளை தொடர்ந்தால்
போதும் என்பதைத்
தவிர வேறு
எந்த நோக்கமும்
இல்லாதவர் பழனிசாமி.
அவரிடம் இருந்து
தமிழகத்தை மீட்க
வேண்டாமா.தமிழகம்
என்ற கம்பீரமான
மாநிலத்தை பா.ஜ.க. அரசின் பாதத்தில்
ஒரு பூனைக்குட்டியைப்
போல படுக்க
வைத்துவிட்டார் பழனிசாமி. இந்த இழிநிலையை துடைத்தாக
வேண்டும். அதற்காகவே
தமிழகம் மீட்கப்பட
வேண்டும்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற உயரிய தத்துவத்தை இந்தியாவுக்கு வழங்கிய மண், இந்த தமிழ் மண். அத்தகைய மண், பாழ்பட்டுக் கிடக்கிறது. அதனை மீண்டும் மாநில சுயாட்சி மண்ணாகப் பண்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆதரித்தாலும் எதிர்த்தாலும் இரண்டிலும் உறுதியாக இருக்கக் கூடியவர் கலைஞர் என்று பிரதமர் அம்மையார் இந்திரா காந்தி அவர்களால் மதிக்கப்பட்ட கலைஞர் வாழ்ந்த தமிழகம், இன்றைய ஆட்சியாளர்களால் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் பரிதாபத்துக்குரியவை. கலைஞர் காலத்துக் கம்பீரத்தை நாம் மீண்டும் கொண்டு வர வேண்டும்.
சிறப்புப்
பொதுக் கூட்டத்துக்கு,
துணைப் பொதுச்
செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி
ஜெகதீசன் , துணைப்
பொதுச் செயலாளர்
அந்தியூர் செல்வராஜ்
எம்.பி., ஈரோடு தெற்கு மாவட்ட
திமுக செயலாளர்
முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக
செயலாளர் நல்லசிவம்,
உயர்நிலை செயல்திட்டக்
குழு உறுப்பினர்
முன்னாள் எம்.பி., திருச்செங்கோடு
எம்.கந்தசாமி
, நெசவாளர் அணிச் செயலாளர் சச்சிதானந்தம், கொள்கைப்
பரப்பு இணைச்
செயலாளர் வி.சி.சந்திரகுமார்,
இலக்கிய அணி
துணைச் செயலாளர்
ஈரோடு இறைவன்,
விவசாய அணி
இணைச் செயலாளர்
கள்ளிப்பட்டி மணி, விவசாய அணி இணைச்
செயலாளர் என்.சிவகுமார், சட்டத்துறை
இணைச் செயலாளர்
அருட்செல்வன், மருத்துவ அணித் தலைவர் டாக்டர்.
செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு வடக்கு,தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை, வட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.