logo
மக்கள் நீதி மய்யம் சார்பில் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்  அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

மக்கள் நீதி மய்யம் சார்பில் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

15/Oct/2020 02:30:14

புதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா, இளைஞர்கள் எழுச்சி நாள் விழா ஆகிய இருபெரும் விழா இன்று கொண்டாடப்பட்டது.

 

விழாவுக்கு மத்திய மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில துணை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், திருமேனி, விவசாய அணி பொறுப்பாளர் மூர்த்தி, மகளிர் அணி பொறுப்பாளர் தனலெட்சுமி, பொறியாளர் அணி பொறுப்பாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

புதுக்கோட்டை வயி.சண்முகம்பிள்ளை ஜூவல்லர்ஸ் நிறுவன இயக்குநர் வயி..வெ. ராகுல், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அப்துல் கலாமில் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து  இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும், தையல் பயிற்சியும், அழகுக்கலை பயிற்சியும் தொடங்கி வைக்கப்பட்டன. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் அதன் முதற்கட்டமாக இரு தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று தங்கள் நிறுவனத்துக்கு பணியாளர்களைத் தேர்வு செய்தனர்.

 நிகழ்ச்சியை, ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாவட்ட செயலாளர் ஜெய் பார்த்தீபன் தொகுத்து வழங்கினார். நிறைவில் நகரச் செயலாளர் ராஜகோபால் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் ஹக்கீம், ராமு, சாதிக், பரணிதரன், நவீன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Top