logo
கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

30/Oct/2020 03:54:49

ஈரோடு: கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று  வெகு விமரிசையாக நடந்தது.

குடமுழுக்குக்காக  இக்கோயிலில் கடந்த 6 மாதத்திற்கு முன் திருப்பணிகள் தொடங்கியது.கோவில் முன் மண்டபம் புதிதாக கட்டப்பட்டது அதற்கு வண்ணம் தீட்டுதல்,  உள்ளிட்ட திருப்பணிகள்  ரூ .70 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது.

 குடமுழுக்குக்காக   யாசாலை பூஜைகள்  கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  தினமும் யாக சாலையில்  பூஜை நடந்தது.இன்று யாக சாலைகள் வைக்கப்பட்டு தீர்க்க கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவிலை சுற்றி வந்தது. அதைத்தொடர்ந்து கோயிலை சுற்றி ராஜகோபுரம் மூலவர் கோபுரம் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது.

இந்த குடமுழுக்கு விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, பகுதி செயலாளர் முருகுசேகர். ஆவின் துணைதலைவர்  குணசேகர் உள்பட முக்கிய நிர்வாகிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் பங்கேற்றனர்.

குடமுழுக்கு விழா  பங்கேற்ற பக்தர்கள்,  பொதுமக்கள் மீது புனித நீர்தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தில் திரளான  பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு இக்கோயிலில் மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது. 


Top