logo
புதுக்கோட்டை அருகே பேக்கரியில் சாப்பிட வந்தவர்கள் கொண்டுவந்த பையில் இருந்து வெடி பொருள் வெடித்து சிதறியதால்  பரபரப்பு

புதுக்கோட்டை அருகே பேக்கரியில் சாப்பிட வந்தவர்கள் கொண்டுவந்த பையில் இருந்து வெடி பொருள் வெடித்து சிதறியதால் பரபரப்பு

29/Oct/2020 12:43:36

புதுக்கோட்டை -தஞ்சை  தேசிய நெடுஞ்சாலையில் இச்சடியில் தமிழ் என்பவர் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார்.

 நேற்று(அக்.27)  இரவு இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் அவர்களது பேக்கரிக்கு  தேனீர் அருந்துவதற்காக வந்துள்ளனர் .இரண்டு பேரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறிது  நேரத்தில் அவர்கள் கொண்டு வந்த  பை வெடித்து சிதறியுள்ளது

இதனால் அலறி அடித்துக்கொண்டு ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர்.

 மேலும் பேக்கரிக்கு வந்த இரண்டு பேரும் தப்பி ஓட முயற்சி செய்தனர் அதில் ஒருவருக்கு வெடி விபத்தில் பலத்த காயமடைந்தார் மற்றொருவர் தப்பி ஓட்டம் எடுத்தார்.பலத்த காயமடைந்த வரை பேக்கரியில் இருந்தவர்கள் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது அவரிடமிருந்து கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதையடுத்து  சம்பட்டிவிடுதி  போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவரிடம் விசாரணை செய்ததில்  அவர்கள் இருவரும் வீரர் அண்ணன் என்பதும் ராஜா வீராவின் தம்பி என தெரியவந்தது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதில் வீரா தப்பி ஓடி விட்டார் ராஜா பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், ராஜா மற்றும் வீரா ஆகியோர் வேறு யாரையாவது கொலை செய்வதற்காக வெடிபொருள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்தனரா அல்லது இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களா என்பது குறித்து  போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Top