28/Oct/2020 04:05:52
ஈரோடு: அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேரூராட்சி பகுதிக்கும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி சட்டத்தை விரிவுபடுத்தி பேரூராட்சி பகுதிக்கும் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் சலங்கபாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தாலுகா செயலாளர் எஸ் மாணிக்கம் தலைமையில்( 28.10. 2020) இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர் விஜயராகவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஏ.ஜெகநாதன். தோழர் எம் ஆர் பெரியசாமி .கே ஆர் சண்முகம். பி மாதையன் .மாவட்ட குழு உறுப்பினர் ஏ.ஆறுமுகம், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எம் .வினிஷா, கே. பொன்னுசாமி உட்பட 600-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு 1000 மனுக்களை பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்தனர்.