logo
சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் தி.மு.க:  மேற்கு தொகுதி வேட்பாளர் முத்துசாமி பேச்சு

சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் தி.மு.க: மேற்கு தொகுதி வேட்பாளர் முத்துசாமி பேச்சு

02/Apr/2021 08:58:54

ஈரோடு, ஏப்: ஈரோடு மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சு.முத்துசாமி, சங்கு நகர், சூரம்பட்டி வலசு, வெண்டிபாளையம் பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று உதய சூரியன் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.

சங்கு நகர் பகுதி சிறுபான்மையின மக்களிடம், வேட்பாளர் சு.முத்துசாமி பேசியதாவது: தமிழகத்தில் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் சகோதரர்களாக பல காலமாக வாழ்ந்து வருகிறோம். ஜாதி, மதங்களை கடந்து, மனித நேயத்துடன் அனைவரையும் தி.மு.க. போற்றி வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு தி.மு.க. என்றைக்கும் பாதுகாவலாக இருக்கும்.


வடமாநிலங்களை போல, தமிழகத்தை மாற்றிவிடலாம் என சிலர் கருதுகின்றனர். அவர்களின் கனவு ஒரு நாளும் பலிக்காது. ஏனெனில் ஈவெரா, அண்ணாதுரை, கருணாநிதி போன்றோர் பிறந்து வாழ்ந்த மண். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றும். அதற்கான அனைத்து திட்டங்களையும் முன்னதாகவே, தலைவர் ஸ்டாலின் வகுத்துள்ளார்.

சங்கு நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாக, பொதுமக்கள் மனு வழங்கினர். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். வீடுகள் இல்லாதவர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.

வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் வசதிக்காக சங்கு நகர், சூரம்பட்டி வழியாக, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் மற்றும் பிரதான பகுதிக்கு அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்களுக்காக உழைக்கும் வாய்ப்பை எனக்கு வழங்க, உதய சூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.

Top