logo
கொங்கு மாமணி செங்கோட்டுவேல் மறைவுக்கு கொமதேக இரங்கல்

கொங்கு மாமணி செங்கோட்டுவேல் மறைவுக்கு கொமதேக இரங்கல்

28/Oct/2020 10:38:41

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர்  ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட இரங்கல் செய்தி: கேஏஎஸ் என்று அன்போடு அழைக்கப்படும் கொங்கு மாமணி கே.ஏ.செங்கோட்டுவேல் அவர்கள் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை பால் உற்பத்தியாளர்களுடைய வாழ்க்கையை காப்பாற்ற அர்ப்பணித்தவர்.

வயதாகி நடமாடுவதற்கு சிரமமாக இருந்த சூழ்நிலையிலும் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்து பால் உற்பத்தியாளர்களின் மேம்பாட்டுக்காக கோரிக்கைகள் வைத்து பாடுபட்டவர்.

ஒவ்வொரு முறை பால் விலையேற்றத்திலும் அவருடைய பங்கு பெரிய அளவிலே இருந்திருக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு அரிய மனிதர் நம்மை விட்டு பிரிந்திருப்பது வருத்தமளிக்கிறது.

அன்னாரது குடும்பத்தாருக்கும், பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆறுதலை தெரிவித்து ஆழ்ந்த இரங்கலை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Top