28/Jun/2021 05:30:30
தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்றவாறு அவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண் டும். மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு 75%, தனியார் மருத்துவமனைகளுக்கு 25% என்ற விகிதத்தில் உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு நாள் தேவையைவிட அதிக தடுப்பூசி விநியோகம் செய்ய ப்படுகிறது. அதுவே அரசு மருத்துவமனைகளில் ஒருநாள் தேவையைவிட குறைவான தடுப்பூசி களே இருக்கின்றன. எனவே, அரசு மருத்துவ மனை களுக்கான உள் ஒதுக்கீட்டை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு 90%, தனியார் மருத்துவ மனைகளுக்கு 10% என்ற விகிதத்தில் தடுப்பூசி ஒதுக்கீட்டை மாற்றியமைக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.