logo
புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி கோவிட் கவனிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி கோவிட் கவனிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திடீர் ஆய்வு

24/Jun/2021 08:49:09

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டம், புதுப்பட்டி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவனிப்பு மையத்தி னை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வியாழக்கிழமை (24.06.2021) திடீர் ஆய்வு மேற்கொ ண்டார்.
ஆய்வுக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ கத்தில்  மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக  கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கோவிட் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.  மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொ ண்ட நடவடிக்கையின் காரணமாக கோவிட் தொற்று இரட்டை இலக்கத்தில் குறைந் துள்ளது.

கோவிட் தொற்று இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை மாற்றும் வகை யில் தேவையான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகை யில் புதுப்பட்டி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கவ னிப்பு மையம்  ஆய்வு செய்யப்பட்டது.
இந்த கோவிட் கவனிப்பு மையத்தில் 60 படுக்கைகள் கொண்டு கோவிட் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவிட் தொற்று கண்டறியப்பட்டு கோவிட் அறிகுறி இல்லாதவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சிகிச்சை மையத்திற்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 
இதேபோன்று கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோவிட் தொற்று கண்டறியப் பட்டு, கோவிட் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்;சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இம்மருத்துவமனையில் கோவிட் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறி உள்ளவர்கள் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனை கோவிட் சிகிச்சைப் பிரிவிலும், அறிகுறி இல்லாதவர்கள் புதுப்பட்டி கோவிட் கவனிப்பு மையத்திலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிக பாதிப்புள்ள கோவிட் நோயாளிகள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர். கந்தர்வக் கோ ட்டை வட்டாரங்களில் கண்டறியப்படும் கோவிட் நோயாளிகளுக்கு இப்பகுதிகளிலேயே சிகிச்சை அளிக்கப்படுவதால் கோவிட் நோயாளிகள் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சிகிச் சைக்கு செல்வது தவிர்க்கப்பட்டு, அங்கு மருத்துவர்களின் பணிச்சுமை குறைக்கப்படு கிறது.
மேலும் மாவட்டம் முழுவதும் கோவிட் கவனிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அந்தந்த பகுதிகளிலேயே கோவிட் நோயா ளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களை கோவிட் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் கோவிட் தடுப்பூசி முகாம் கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி அதிக அளவு செலுத்தப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாது கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்வதுடன், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற நோய் தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்றி கோவிட் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர் கவிதா ராமு. ஆய்வின் போது அரசு மருத்துவர் சந்தோஷ், வட்டாட்சியர் புவியரசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Top