logo
பப்ஜி வீடியோ விளையாட்டிற்கு அடிமையான பள்ளிச் சிறுவன் தற்கொலை

பப்ஜி வீடியோ விளையாட்டிற்கு அடிமையான பள்ளிச் சிறுவன் தற்கொலை

27/Oct/2020 10:19:47

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பப்ஜி வீடியோ விளையாட்டிற்கு அடிமையாகி சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் பகுதியை சேர்ந்தவர் அருண், இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக பள்ளிக்கு செல்லாமல் செல்போனில் பஜ்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்தாராம்.

.இதையடுத்து, அருணின் தந்தை, இவரை கோவையில் உள்ள மனநல மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை அளித்தபின்,  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்து புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக தங்க வைத்துள்ளார்.

இச்சூழ்நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்குச் சென்று கயிற்றால் தூக்கு போட்டு  அருண் தற்கொலை செய்து கொண்டார். 

தகவலறிந்த புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் அருணின் பிரேதத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஜ்ஜி வீடியோ விளையாட்டுக்கு அடிமையாகி சிறுவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 


Top