logo
திமுக, அதிமுக கட்சிகள் திட்டமிட்டு புறக்கணிப்பதாக தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கண்டனம்

திமுக, அதிமுக கட்சிகள் திட்டமிட்டு புறக்கணிப்பதாக தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கண்டனம்

27/Oct/2020 06:05:17

புதுக்கோட்டை: முத்தரையர் இன மக்களை திமுக, அதிமுக கட்சிகள் திட்டமிட்டு புறக்கணிப்பதற்கு தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

 புதுக்கோட்டையில் இன்று(27.10.2020)  நடைபெற்ற தமிழ் நாடு முத்தரையர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில்  இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின்  புதுக்கோட்டை மாவட்ட சங்கம் சார்பில் அண்ணாசிலை அருகில் உள்ள தனியார் மண்டபத்தில்  நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநிலத்  துணைச் செயலாளர் இளங்கோ, மாநில மகளிர் அணி செயலாளர் மணிமேகலை, ஆடிட்டர் வைத்தியலிங்கம், மாவட்ட தலைவர்  அம்பலத்தரசு துணைத்தலைவர் மதனா எழிலரசி மாவட்ட செயலாளர் சிதம்பர பாண்டியன், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் விவரம்: அரசியல் கட்சிகள் தொடர்ந்து மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்புகளில் முத்தரையர்களை புறக்கணிப்பதையும், அதேபோல் அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ள 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவில்  முத்தரையருக்கு வாய்ப்பு வழங்காததையும்..2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அறிக்கை தயாரிக்கும் 8 பேர் கொண்ட குழுவில் முத்தரையருக்கு இடமளிக்காததையும் கண்டிப்பது.

 வருகின்ற 2021 -ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது.  சீர் மரபினர் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த கூடாது என அறிக்கை விட்ட பாமக நிறுவனர்  ராமதாசை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டன.

Top