logo
திருமயத்துக்கு வரும் மு.க.ஸ்டாலினை வரவேற்க கட்சியினர் திரண்டு வர வேண்டும்: எம்எல்ஏ ரகுபதி அழைப்பு

திருமயத்துக்கு வரும் மு.க.ஸ்டாலினை வரவேற்க கட்சியினர் திரண்டு வர வேண்டும்: எம்எல்ஏ ரகுபதி அழைப்பு

14/Feb/2021 06:39:12

திருமயம், பிப்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க கட்சியினர் திரண்டு வரவேண்டுமென திருமயம்  எம்எல்ஏ ரகுபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சட்டப்பேரவைத்தேர்தல் வருவதையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக பிப்ரவரி15 புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பெல் நிறுவனம் அருகே உள்ள ஊனையூர் கிராமத்தில் நடைபெறும்  உங்கள் தொகுதியில்  ஸ்டாலின் -எனும் தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருமயம் வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பொது மக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க கட்சியி னர் திரண்டு வரவேண்டும் என அதில் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Top