logo
தமிழகத்தில் முடிவடைந்த காரீப் பருவத்தில் 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை-உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தகவல்.

தமிழகத்தில் முடிவடைந்த காரீப் பருவத்தில் 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை-உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தகவல்.

25/Oct/2020 12:08:26

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை வழியாக அரசு நிகழ்ச்சிக்கு சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கருடன் இணைந்து 24.10.2020- அன்று புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், மணவிடுதி ஊராட்சி, கிடாரம்பட்டியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை திடீர் ஆய்வு செய்த  உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ்  செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

அனைத்து தரப்பு மக்களின்  முன்னேற்றத்திற்காக தொடர்ந்து எண்ணற்ற திட்டங்களை  முதல்வர் செயல்படுத்தி வருகிறார். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொண்டதால் தமிழகத்தில் நோய் தொற்றால் குணமடைந்தவா;கள் எண்ணிக்கையில் மற்ற மாநிலங்களைவிட முன்னோடியாக விளங்குகிறது. அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.

இத்தகைய கொரோனா தொற்று காலத்திலும் வளர் ச்சித்திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகின்ற பணிகள் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது என்பதற்காக முதல்வர் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு தினந்தோறும் உரிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். 

குறிப்பாக உணவுத்துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 1 முதல் செப்டம்பர் 30 வரை ஒரு காரீப் பருவம் ஆகும். கடந்த அக்டோபர் 1 முதல் செப்டம்பர் 30 வரை முடிவடைந்த காரீப் பருவத்தில்  32,41,000 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கிய காலத்திலிருந்து தற்பொழுது தான் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா ஆட்சியில் 2011-ஆம் ஆண்டு ஜுன் 6 -ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவையும், சம்பாவும் சேர்ந்து வந்த விளைச்சல் 23 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே இருந்தது. ஆனால் குறுவை இல்லாத இந்த பருவத்திலும் 32.41 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் . ரூ.6,130 கோடி விவசாயிகளின் வங்கிகணக்கில் 24 மணி நேரத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அவர்களால் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட இ-கொள்முதல் முறையாகும்.

இந்த ஆண்டு காரீப் பருவம் செப்டம்பர் 1 -இல் தொடங்கியது. 23.10.2020  -ஆம் தேதி வரை 3 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது குறுவை சாகுபடி வரலாற்றில் எந்த காலத்திலும் நடைபெற்றது கிடையாது. ஒரு நாளைக்கு 4 லட்சம், 4.50 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதுடன், இன்றைய தினம் மட்டும் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத பகுதிகளில் 5 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி 75 லட்சம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 

நெல் கொள்முதல் செய்வது, நெல் உடனடியாக அறவைக்கு அனுப்புவது போன்ற பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரையில் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் புதிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகளிடமிருந்து கோhயீக்கை வந்தால் அந்தப்பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு களத்துடன் கூடிய நிரந்தர கட்டடம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலேயே குறுவை சாகுபடி முடிந்து விடும். எதிர்பார்ப்புக்கு மாறாக 10 நாட்களுக்கு முன்னறே மழை வந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட சிறு பிரச்சினைகளும் ஓரிரு நாளில் சரிசெய்யப்பட்டது.

டெல்டா மற்றும் டெல்டா அல்லாத பகுதிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் நெல் அறுவடை செய்யப்பட்டுவிட்டது இதில் விவசாயிகள் சாகுபடி செய்த நெல் 85 சதவீதம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த காலங்களில் ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு 800 நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும்.

தற்பொழுது ஒரு நாளைக்கு 1,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் ஒரே ஊரில் 1,000 மூட்டைக்கு மேல் நெல் வரும் பட்சத்தில் அங்கேயே மற்றொரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 ஊர்களில் ஒரே இடத்தில் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதன்படி விவசாயிகளின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. பரவலாக்கப்பட்ட நெல் கொள் முதல் திட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா 2002- ஆம் ஆண்டு அறிவித்தார். இத்திட்டமே அனைத்து காலங்களிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

மத்திய அரசு நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது. மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகாயீக்க அனுமதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கான உத்தரவு மத்திய அரசிடமிருந்து நவம்பர் மாதம் வரப்பெறும். மேலும் நவம்பர்,  டிசம்பர்  போன்ற மழைக்காலங்களில் மட்டுமே இதற்கான உத்தரவு கிடைக்கும்.

ஆனால் அக்டோபர் மாதமே இதற்கான அனுமதியை வழங்க வேண்டுமென கோhயீக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன்படி சனிக்கிழமை(அக்.24) நாகப்பட்டினத்தில் மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது.  இன்று(அக்.25) திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளார்கள். இதனை பொறுத்தே அனுமதி வழங்குவார்கள்.

மேலும் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அனுமதி வழங்கப்படும் என நம்புகிறோம். ஈரப்பதத்தால் விவசாயிகள் எந்த இடத்திலும் நெல் கொள்முதல் செய்யாமல் இருக்கக்கூடாது என்பதனால் சிறிது ஈரப்பதம் இருந்தாலும் அந்த நெல்லை கொள்முதல் செய்து உடனடியாக அறவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

நெல் கொள்முதல் காலங்களில் உணவுத்துறையில் உள்ள கண்காணிப்புக் குழுக்கள் மூலம் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். விவசாயிகளிடமிருந்து வரப்பெறும் புகார் களின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட இடங்களில்  ஆய்வு செய்து தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒரு நாடு, ஒரு ரேசன் திட்டம் தமிழகத்தில் அக்டோபர் 1-இல் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

பயோ மெட்ரிக் முறையில் கைரேகை வைப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் தற்பொழுது இம்முறை நிறுத்தப்பட்டு இதனை சரிசெய்தபின் மீண்டும் படிப்படியாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தற்பொழுது பழைய முறையிலேயே மின்னணு குடும்ப அட்டைகளை ஸ்கேன் செய்து பொருட்களை வாங்கி கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட சதவீதத்தில் மட்டுமே நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமே அனைவருக்கும் பொது விநியோகத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொரோனா காலத்தில் மத்திய அரசு அறிவிப்பின்படி முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

எனினும் முன்னுரிமை இல்லாத 1 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல்வர் உடனடியாக ஒதுக்கிய  ரூ.382 கோடி நிதி மூலம் அனைவருக்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று பருப்பு, சர்க்கரை, எண்ணை போன்ற பொருட்களை விலையில்லாமல் வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம் ஆகும்.

பண்ணை பசுமைக் கடைகளில் பொரிய வெங்காயம் ரூ.45-க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. வெங்காய விலைச்சல் உள்ள இடத்தில் மழை கூடுதலாக பெய்த காரணத்தினால் வெங்காயம் கொள்முதல் செய்தல், எடுத்து வருதல் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை ஏற்றம் தற்காலிகமானதாகும். அரசு இதனை கண்காணித்து வருகிறது. எனினும் இந்த விலையேற்றம் தொடர்ந்தால் நியாய விலைக்கடைகளில் பொது மக்களுக்கு வெங்காயம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் உள்ளாட்சித் துறைகளின் அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிகளில் தேவைக்கேற்ப அம்மா சிமெண்ட் வழங்கப்படுகிறது என்றார் அமைச்சர் அரா. காமராஜ்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பா.ஆறுமுகம், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் த.ஜெயலெட்சுமி,  மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் கா.மோகன் உள்பட  தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Top